Wednesday, January 7, 2009

10 பந்துகளே மீதமிருக்கையில் ஆஸ்திரேலியா அதிரடி வெற்றி


இன்று நடந்த இறுதி டெஸ்ட் போட்டியில் “சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனின்” மனோபாவத்தோடு களமிறங்கி, முடிவைப் பற்றி கலங்காமல் “பறவையின் கண்ணை மட்டுமே” கண்ட அர்ஜூனனைப் போல், வெற்றியை மட்டுமே எண்ணி செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.


பத்து பந்துகளே மீதமிருந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்டத்தை டிராவில் முடிக்க வாய்ப்பு இருந்தநிலையில், இப்படி தென்னாப்பிரிக்கா வாய்ப்பை தவறவிடும் என நினைக்கவில்லை. ஆஸ்திரேலியா மண்ணைக்கவ்வி விடும் என்று நினைத்திருந்த வேளையில், அவர்களின் போர்க்குணம் வெளிப்பட்டிருக்கிறது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் செக் இது.


முதலிடத்திற்கு வருவதைக்காட்டிலும் அதனை தக்கவைக்க பாடுபடும் போராட்டமே மிகப்பெரியது என்பது உண்மை. ஆஸ்திரேலிய அணி அந்த போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து ஆர்ப்பரித்து வரும். நம்முடைய அணி இங்கு கண்ட வெற்றிகளிலே தன்னைத் தொலைத்துவிடாமல், புது உத்வேகத்தோடு செயல்பட்டு ஆஸ்திரேலியாவிடமிருந்தும், தென்னாப்பிரிக்காவிடமிருந்தும் முதலிடத்தை தட்டிப் பறிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதன் மண்ணிலேயே டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருக்கும் தென்னாப்பிரிக்காவின் சாதனை நிச்சயம் பாராட்டத்தக்கது என்பதில் ஐயமில்லை.


திமுக மற்றும் அதிமுகவின் பணபலம், மீடியா பலம், கட்சி சின்ன பலம் - உட்பட பல பலங்களுக்கிடையே பலப்பரிட்சை நடத்திவரும் தேமுதிக போல நம் இந்திய அணி போராட வேண்டிய சூழலில் உள்ளது. விட்டுத்தர ஏதுமில்லை என்றாலும் எட்டிப்பறிக்க ஆயிரம் உள்ளது என்பதை மனதில் கொண்டு போராட வேண்டியது கேப்டனின் (தோனி) கடமை.


நம்ம சின்னம் முரசு இல்லிங்க... வெற்றிக்கோப்பைதானுங்க...

2 comments:

  1. அய்யா இங்கேயும் அரசியலா!!! ஆஸ்திரேலியாவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அய்யா இங்கேயும் அரசியலா!!! ஆஸ்திரேலியாவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar