Tuesday, August 5, 2008

சும்மா குறிப்புகள் - 1



ப்ரியம் நிறைந்த நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

சமீபத்தில் நண்பர் தனசேகரிடம் அளவளாவிக் கொண்டிருந்தபோது, ப்ளாக் எழுதாது ஏன் என நோண்டி நொங்கெடுத்துக்கொண்டிருந்தார். நண்பர் நாடோடி இலக்கியனும் ஏன் எழுதவி்ல்லை என துருவிக்கொண்டிருக்கிறார். பெரிதாய் சொல்லிக்கொள்ளும்படி காரணம் ஏதுமி்ல்லை. விசைப்பலகை பிரச்சனை செய்துவிட்டது. ஆங்கில எழுத்துகள் E மற்றும் Y வேலை செய்யவி்ல்லை. சரி செய்ய சோம்பேறித்தனம் மற்றும் எழுதுவதிலும் பெரிதாக ஆர்வமில்லாமல் இருந்து விட்டது. இப்போது விசைப்பலகை தயார். எதாவது எழுதலாமே என்று அமர்ந்துவிட்டேன்.

* * * * *

குசேலன் படம் பார்க்கவில்லை. வலையெங்கும் துவைத்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் உலகத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வரும்போது பார்க்கலாம் என உத்தேசம். படம் பார்த்த நண்பர்களிடம் விசாரித்தேன். குட்டிப் பட்டாளத்தோடு மாயாஜால் சென்று படம் பார்த்த நண்பர் ராகவன் சொன்னது: “ பசங்களுக்கு படம் பிடிக்கல”. குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்காக, ரஜினி அவர்கள் ஹைதராபாத்திலிருந்து அவர்களுக்கு புரியும் விதத்தில் request ( அது மன்னிப்பு இல்லையாமே...!) செய்ததாக, CNN - IBN ல் செய்தி வெளிவந்தபோதே முடிவு செய்துவிட்டேன்; இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதில்லையென்று. கலை வியாபாரிகளிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போவது தமிழ் மக்களுக்கொன்றும் புதிதில்லையே...!

* * * * *

“குருவி” பாடல்கள் தொலைக்காட்சியில் வந்தால், என் 14 மாத மகன் தவறவிடுவதில்லை (“தேன் தேன் தேன்...” என்கிற மெலடி உட்பட...) . அப்படி என்னதான் பிடிக்கிறதென்றும் புரியவில்லை. தகிட தகிட எனத்துவங்கும் கலக்கலான “கத்தாழ கண்ணால...” முதல் அவனுக்குப்பிடித்த பாடல்கள் ஒரு வரிசையில் அமைகின்றன. தசாவதாரத்தில் “முகுந்தா முகுந்தா...” மற்றும் “கல்லைமட்டும் கண்டால்...” என இரண்டு பாடல்களும் அவனை வசீகரித்திருக்கின்றன. நேபாளி படத்தில் வரும் “கனவிலே கனவிலே...” என்கிற பாடலும், “பதினெட்டு வயது பட்டாம்பூச்சி...” என ஒரு பெண் துள்ளியாடும் ஒரு பாடலையும் இமை அசையாது ரசிக்கிறான். அவனுடைய ஹிட் லிஸ்ட்டின் புதுவரவு : சுப்ரமணியபுரத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்” என்ற அழகிய பாடல்.

* * * * *

ஆடி மாதத்தின் மையத்திலிருக்கிறோம். இன்னும் 12 நாட்களுக்கு ஆடி விளம்பரங்கள் நம்மை மேலும் துவைத்தெடுக்கும். ஸ்னிக்தா அழகாக அபிநயம் காட்டும் “மழை மழை மழை மழை பெய்யுதே...” என்ற sridevi textiles விளம்பரம் அட்டகாசம். அளவுக்கு அதிகமாக உணர்ச்சி கொட்டி + காட்டி, ப்ரியாமணி ஆடும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் தொடர்ந்து பார்க்க சலிக்கிறது. “ஒரே எடத்துல ரெண்டு பாருங்க...” என்று அவர் தொடர்ந்து சொல்வதும் அபத்தம். மாறாக மீரா ஜாஸ்மின் வரும் “சாமுத்ரிகா பட்டு” விளம்பரம் படு பாந்தம். முன்பு படபடவென்று வந்த அதே விளம்பரத்தை சற்று பிரேக் போட்டு நிறுத்தி, ஸ்லோவாக சொல்கிறார்கள். இதுவும் அதே அழகுடன் மிளிர்கிறது. “சர்வ லட்சணமான பட்டு” என்ற பிரயோகம் கூட “லட்சணமான பட்டு” என சுருங்கிவிட்டது. பிரகாஷ்ராஜ் வரும் வனஸ்பதி விளம்பரத்தைக் காட்டிலும், ஜெயராம் கலக்கும் துணிக்கடை விளம்பரம் சிறப்பு. அவருடைய தமிழில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. “நொட்டு” என்று பஞ்சதந்திரத்தில் அவர் அடிக்கும் ஒரு டைமிங் காமெடியை இப்போது நினைத்தாலும் சிரித்து மாளமுடியாது. இந்த காட்சி யாருக்கேனும் நினைவிற்கு வந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

* * * * *

இப்போதைக்கு ஜூட்டு... விரைவில் ரிபீட்டு....

7 comments:

  1. நல்லா எழுதறீங்க!

    நிறைய எழுதுங்க!

    ReplyDelete
  2. நண்பர் பரிசலாருக்கு மிக்க நன்றி.

    உங்கள் வார்த்தைகள் மிகவும் உற்சாகப்படுத்துகின்றன.

    அன்பு நித்யகுமாரன்

    ReplyDelete
  3. நானும் என் அனுபவத்தில் சொல்கிறேன், குழந்தைகளுக்கு பிடிக்கும் பாட்டுகள் எப்பொதுமே மெகா ஹிட் ஆகின்றன.

    ReplyDelete
  4. நானும் என் அனுபவத்தில் சொல்கிறேன், குழந்தைகளுக்கு பிடிக்கும் பாட்டுகள் எப்பொதுமே மெகா ஹிட் ஆகின்றன.

    ReplyDelete
  5. முரளிகண்ணன் நீங்கள் சொல்வது உண்மை.

    வருகைக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  6. கலக்கலா எழுதறீங்க நித்யகுமாரன் நிறைய எழுதுங்க!

    ReplyDelete
  7. பையன் பயங்கரமான ரசிகனா இருக்கான் போல.
    :))
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar