Wednesday, March 24, 2010

ஜாக்கி சேகர் பதிவெழுதாததன் மர்மம் என்ன?




அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு பதிவு. உண்மையை சொல்ல வந்தேன்.

சமீபத்தில் நண்பர் ஜாக்கி சேகரின் புதுமனை புகுவிழாவிற்கு கொளப்பாக்கம் சென்று வந்தேன். அண்ணன் உண்மைத்தமிழன், பைத்தியக்காரன் உள்ளிட்ட நண்பர்களைக் கண்டு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி.
கடல் கடந்து பெரும்பாலும் மன உதவி (ஆறுதல்) கிடைக்கும். ஆனால் ஜாக்கிக்குக் கிடைத்ததோ பண உதவி. ஜாக்கி தம்பதியர் என் வீட்டுக்கு வந்திருந்த போது, என்னிடம் சொல்லிச் சொல்லி அசந்து போனார் வலையுலக அண்ணி. எனக்கு “கண்கள் பனித்தன இதயம் இனித்தது”. கல்கி ஆசிரமத்து சீடர்களைப் போல பரமானந்தத்தில் இருந்தார் ஜாக்கி. இன்னும் கொஞ்சம் கையைக் கடிப்பதாக சொல்லுகிறார். வர வேண்டிய இடத்திலிருந்து வரவேண்டும் போலிருக்கிறது. வரட்டும்.
நண்பர் ஜாக்கி, பட்டை தீட்டப்படாத வைரம் போன்றவர். புறப் பார்வைக்கு அவரின் அருமை தெரியாது. அவரைப் புரிந்து கொண்டால் அது சிறப்பான அறிமுகமாக இருக்கும். எந்த நேரம் வீட்டுக்குப் போனாலும் ஏதாவது ஒரு மொக்கைப் படமேனும் பார்த்துக் கொண்டிருப்பார்.
அவரிடம் நான் ஆச்சரியப்பட்டுப் பார்க்கும் விஷயம் என்னவென்றால், அவர் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் வழக்கம். அதுவும் தேடித்தேடி... ஆங்கிலப் படங்கள் மட்டுமல்லாமல் உலகப்படங்களையும் பார்த்து ரசிக்கிறார். இதில் ஆச்சரியப் பட என்னவிருக்கிறது? அவருடைய படிப்பிற்கு இன்று சப் டைட்டிலோடு வரும் ஆங்கிலப்படங்களை பார்த்து அர்த்தம் புரிந்து கொண்டு, ரசித்து, பகிர்ந்து.... அவரின் உழைப்பும் ஆர்வமும் மெச்சத்தக்கது.

வாயைத்திறந்தால் காக்க காக்க வில்லனைப் போல் கெட்ட வார்த்தைகள் சரளமாக வந்து விழும் அவருடைய பழக்கம், அவருடைய வாழ்க்கைச் சூழல் கொண்டு வந்து தந்தது. அவருடைய இந்த transition க்குப் பின் அண்ணி அவர்கள் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
அண்ணி அவர்கள் என்னோடு பணி புரிந்தார்கள். அப்போதுதான் “சேகர்” (அண்ணி அப்படித்தான் அழைப்பார்), எனக்குப் பழக்கம். “உங்களைப் பத்தி சொல்லிட்டேயிருப்பா... அவளோட கணக்கு தப்பாயிருக்காது...” என்று அப்போது ஜாக்கி சொல்லுவார். அவரோட நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது.

“யோவ் கொஞ்சம் வெயிட் பண்ணுய்யா, நம்ம ப்ராஜெக்ட்லயே ஒரு வீடு கட்டித்தாரேன்னு” எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அண்ணனும் அண்ணியும் கேட்கவேயில்லை. இப்போது குடி புகுந்திருக்கும் வீட்டைப் பார்த்தபோது, கருத்துச் சொல்ல அழைத்தனர். Violation க்கான எல்லையை கடந்து கட்டப் பட்டிருந்த apartment அது. “இதுல விதிமுறைகள் கன்னாபின்னானு மீறப்பட்டிருக்கு. என்ன ஆனாலும் இந்த வீட்டைதான் நான் வாங்குவேன்னு ஒத்தக் கால்ல நின்னீங்கன்னா, வாங்குங்க. நாளைக்கு பிரச்சனைனு வந்தா உங்க ப்ளாட்டை ஒண்ணும் பண்ண மாட்டாங்க.” ன்னு சொல்லிட்டேன்.
வீடு பொதுவாகவே எல்லோரின் கனவு. ஜாக்கியின் வரலாற்றை அவரது ப்ளாக்கில் படித்தவர்களுக்கு அவரைப் பொறுத்தவரை வீடு என்பது அவருக்கு எவ்வளவு முக்கியமானதென்பது புரியும்.

சரி விஷயத்திற்கு வருவோம். புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்த முன்னாள் இன்னாள் பதிவர்கள், வாழ்த்து தெரிவித்த பதிவர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அத்துனை பேருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவு போட்ட பின்பு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக அடுத்த பதிவு அவர் போடாமலே இருக்கிறார். இதன் காரணம் என்ன?
உண்மைத்தமிழன் தமிழ்மண நட்சத்திரமானதைக் கண்டு அதிர்ச்சியில் பதிவுலகம் மீதிருந்த அவர் நம்பிக்கை போய்விட்டதா?

கூடவே இருந்து மைனஸ் குத்து குத்தி வாழ்த்து கூட சொல்லாமல் போன சக முன்னாள் நண்பர்கள் மீது வருத்தத்தில் ஆழ்ந்து போய்விட்டாரா?

புது வீடு போன மகிழ்ச்சியில் பதிவுலகை மறந்து அந்த ஏரியா மகளிர் கணக்கு எடுக்க போய் விட்டாரா?

ஏதேனும் ஒரு மொக்கை கமர்சியல் படத்திற்கு ஒளி ஓவியப் பணிக்காகப் பறந்து விட்டாரா?

அவருடைய தொலைபேசியில் பிடிக்கவே முடியவில்லை. மிகவும் பிசியாகவே இருந்தது. பிறகுதான் சொன்னார். எப்ப போடுவீங்க? எப்ப போடுவீங்க? அடுத்த அபார பதிவு எப்ப போடுவீங்கன்னு வாசகர்கள் அழைத்த வண்ணம் இருக்கிறார்களாம். அதான்யா நானும் கேட்கிறேன் என்ற பிறகு அந்த உண்மையை சொன்னார்.

அவர் சமீபத்தில் குடிபுகுந்த ஏரியாவில் Airtel இணைய இணைப்பே இல்லையாம். BSNL நண்பர்களும் அந்த ஏரியாவிற்கு அருகில் இருக்கிறார்கள் ஆனால் வரவி்ல்லையாம். Reliance நண்பர்களிடம் இவர் எதிர்பார்க்கும் package இல்லையாம். அதிக கணிணிகளை இணைக்கும் package மட்டுமே உள்ளதாம்.

சரி இப்பதான் pendrive லயே அதிவேக இணையம் வந்துடுச்சேன்னு கேட்டா, “அது எப்படி இருக்கும்னு தெரியல... வேகமா இருக்குமா? சொதப்புமா? ” என்று கேள்வி மேல் கேள்வி. ஆராய்ந்து பார்த்தால், பூனை வெளியே வந்தது. “அதுக்காக இப்ப 3000 ரூபா அட்வான்ஸ் பேமண்ட் பண்ணணுமே...!”.
ஜாக்கி அண்ணாவிற்கு பதிவர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்:

உங்க icici, hdfc, axix bank, sbi, sbh, canara bank, iob, indian bank, co-operative bank உள்ளிட்ட எந்த கணக்கின் எண்ணையும் கொடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். (பார்த்துக் கொள்வோம் அவ்வளவுதான்!)

இடைக்காலத் தடைகள் நீங்கி பொங்கி வரும் புது வெள்ளமாக, கதவைத் திறந்தால் வரும் காற்றைப் போல ஜாக்கியின் பதிவுகள் பதிவுலகத்தைத் தாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.


பேரன்பு பிரியங்களுடன்,

நித்யகுமாரன்.


6 comments:

  1. neenga jack sira kalaikireengalo
    puriyala

    ReplyDelete
  2. //இடைக்காலத் தடைகள் நீங்கி பொங்கி வரும் புது வெள்ளமாக, கதவைத் திறந்தால் வரும் காற்றைப் போல ஜாக்கியின் பதிவுகள் பதிவுலகத்தைத் தாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.//

    இதை நானும் வழிமொழிகிறேன்....

    ReplyDelete
  3. நித்யகுமாரன்,

    ஜாக்கி எனக்கும் நல்ல நண்பர். விரைவில் கிளர்ந்தெழுந்து பதிவிடுவார் என்று நம்புகிறேன். நல்ல இடுகைக்குப் பாராட்டுக்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  4. நித்யா எப்படியிருக்கீங்க? கொஞ்சம் நாள் ஜாக்கியை லூஸ்ல விடுப்பா!

    ReplyDelete
  5. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar